Monday, April 24, 2006

மூன்றாவது வார உரையாடல்

கோவை ரெயின்போ எஃப் எம் உரையாடல் பற்றிய என் முந்தைய பதிவுகள் இங்கே:

வானொலியில் வலைப்பதிவுகள்
முதல் வார உரையாடலின் ஒலிக்கோப்பு
இரண்டாம் வார உரையாடலின் ஒலிக்கோப்பு

மூன்றாம் வார உரையாடலின்போது இன்னும் கொஞ்சம் இறுக்கம் குறைந்து தோழமையுடன் உரையாடமுடிந்தது. நீண்டுவிட்ட இந்த வார உரையாடலின் ஒலிக்கோப்பை இங்கே வலையேற்றியிருக்கிறேன்.

http://kasilingam.com/media/inaiyam_radio_3.mp3

Monday, April 17, 2006

இரண்டாம் வார உரையாடலின் ஒலிக்கோப்பு

கோவை வானொலியின் ரெயின்போ எஃப் எம் அலைவரிசையில், வண்ணக்ககளஞ்சியம் நிகழ்ச்சியில் வாராவாரம் செவ்வாய்க்கிழமையன்று ஒரு தொடர் உரையாடலில் பங்கேற்கிறேன். அதன் இரண்டாம் பகுதி சென்றவாரம் ஒலிபரப்பானது இங்கே: http://kasilingam.com/media/inaiyam_radio_2.mp3

Monday, April 10, 2006

முதல் வார உரையாடலின் ஒலிக்கோப்பு

முதல் வார உரையாடலின் ஒலிக்கோப்பு இங்கே வலையேற்றப்பட்டிருக்கிறது. ஒலிப்பதிவில் இரைச்சலைக் குறைத்திருக்கலாம். அடுத்த முறை செய்வேன்.

http://kasilingam.com/media/inaiyam_radio_1.mp3

முதல்முறையாக நேரடி ஒலிபரப்பு அனுபவம்

தொலைக்காட்சி/வானொலியில் இதுவரை பங்கேற்காததாலும், இது நேரடியாக ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதாலும் சற்று பதட்டமாகவே இருந்தது. திரு சேயோன் ஒலிபரப்புத்துறையில் மிகுந்த அனுபவம் மிக்கவராதலால் எந்த வித முன்பார்வையும் இன்றி, கேள்விகளை ஒத்திகை பார்க்கவும் வழியின்றி, செய்ய வேண்டியதாயிற்று. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்என்று இப்போது தெரிகிறது. அடுத்த வாரம் பார்க்கலாம்.

இந்த அனுபவம் பற்றி மேலும் சில குறிப்புகளை எழுத எண்ணியிருந்தேன். நேரப்பற்றாக்குறையால் முடியவில்லை.

வானொலியில் வலைப்பதிவுகள்

தமிழ் இணையத்தில், குறிப்பாக வலைப்பதிவுகள் மட்டத்தில் நிகழ்ந்துவரும் முன்னேற்றங்கள் பற்றி இணையத்துக்கு வெளியே இயங்கும் ஊடகங்களில் அதிகம் தெரிவதில்லை. இயன்ற அளவு அத்தகைய ஊடங்ககளில் இந்த செய்திகள் வரச்செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அவற்றில் ஒன்று வானொலி மூலம் சுருக்கமாக சில செய்திகளை சொல்லுவது. அகில இந்திய வானொலியின் கோவை நிலைய இயக்குநர் கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களுடன் இதுபற்றி அளவளாவியபோது இதற்கு ஒரு வழிகிடைத்தது. அதன்மூலம் வாராவாரம் கோவையிலிருந்து ஒலிபரப்பாகும் ரெயின்போ எஃப்.எம். மூலமாக ஒரு உரையாடல் வடிவத்தில் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள இருக்கிறோம். முதல் நிகழ்ச்சி சென்ற வாரம் செவ்வாயன்று முற்பகல் 11:00 முதல் 12:00 வரை ஒலிபரப்பாகும் வண்ணக்களஞ்சியத்தினூடே ஒலிபரப்பானது. இனி தொடர்ந்து செவ்வாயன்று சுமார் 11:30 மணிக்கு இந்த தொடர் உரையாடல் ஒலிபரப்பாகும். வாய்ப்புக்கொடுத்த திரு. சேயோனுக்கு நன்றி.